அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 13 October 2017

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா?

ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா?

பதில்:

இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் எதையாவது உளறுவதுதான் அறிவு என்று ஆகிவிட்டது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. எனவே ஒரு மதத்தினரின் புனிதப் பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச் சார்பின்மைக்கு எதிரானது என்பதுதான் பிரச்சனையாக்கப்படுகிறது.


Saturday 2 September 2017

குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்?

கேள்வி: குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்?

பதில்: இஸ்லாத்தின் பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்துள்ளன. அதாவது நோன்புப் பெருநாள் தினத்தில் "ஸதகத்துல் ஃபித்ரு" என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பதுபோல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் "உள்ஹியா" என்று சொல்லப்படும் "குர்பானி" கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது.

குர்பானியின் முழுமையான சட்டதிட்டங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.

குர்பானி சம்பந்தமாக சமூக வலைதளங்களில் நம்மிடம் கேட்கப்படும் மற்ற சில சந்தேகங்களுக்கான தெளிவுகளை கேள்வி பதில்கள் பகுதியில் கொடுத்து வருகிறோம். அதன் வரிசையில் குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்? என்ற கேள்விக்கான பதிலை இங்கே காண்போம்.


குர்பானி கொடுக்கப்படும் பிராணியின் தோலை மத்ரஸாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளுக்கோ, தொண்டு நிறுவனங்களுக்கோ ஜமாஅத் நிர்வாகிகளிடமோ மக்கள் கொடுத்து வருகின்றனர். இவற்றில் எவையெல்லாம் மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் முடிவு செய்யவேண்டும்.

Tuesday 29 August 2017

ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும்போது கணவன் மரணித்துவிட்டால்...

கேள்வி: ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும் பெண்மணியின் கணவன் மரணித்துவிட்டால் இத்தாவை எப்படி கடைபிடிக்க வேண்டும்? ஹஜ் கிரியைகளை அந்த பெண்மணி எவ்வாறு நிறைவேற்றுவது?


பதில்:

"இத்தா" என்ற பெயரில் மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறைகளும் மூடநம்பிக்கைகளும் மக்களிடம் வேரூன்றிப் போயிருப்பதால்தான் இப்படியான சந்தேகங்களும் வருகின்றன. கணவனை இழந்த பெண்கள் தங்கள் மறுமணத்தைத் தள்ளிப்போட்டு (காத்திருக்கும்) குறிப்பிட்ட காலகட்டம்தான் "இத்தா" என்பதாகும். அதனால் ஒரு பெண்மணி ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருக்கும்போது கணவன் மௌத்தாகிவிட்டால் தன் ஹஜ் கிரியைகளைத் தொடர மார்க்கத்தில் எந்த தடையுமில்லை.

அதேபோல, எல்லாப் பெண்களுக்கும் எவையெல்லாம் இத்தாவின் சட்டங்களாக சொல்லப்படுள்ளதோ அந்த சட்டங்கள்தான் ஹஜ்ஜில் உள்ள பெண்மணிக்கும் பொருந்தும். அதாவது, இத்தாவுக்காக வரையறுக்கப்பட்ட அந்த நான்கு மாதங்கள் பத்து நாட்களுக்குள் சில விஷயங்களை மட்டும் இஸ்லாம் தடை செய்கிறது.

Saturday 5 August 2017

அல்குர்ஆன் 2:102 - வது வசனம் ஓர் பார்வை


வ்ஹீத்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வோரிடையே தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஏனைய ஜமாஅத்திற்குமிடையில் சூனியம் என்ற ஒன்று, மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் பங்கை வகிக்கிறது.

'சூனியம் என்ற ஒன்று இருக்கிறது; அது  இருப்பதால்தான் அல்லாஹ் சூனியம் பற்றி  சொல்லிக்காட்டுகிறான்; ஆகவே சூனியம் இல்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒன்றை மறுப்பதாகும்; சூனியக்காரன் வைத்த சூனியம் அல்லாஹ் நாடாமல் பலிக்காது; ஆனால் அல்லாஹ் நாடினால் பலிக்கும்' என்பது அவர்களின் வாதம்.

'சூனியம் என்பது இருக்கிறது; ஆனால் சூனியம் என்பதற்கு நீங்கள் வைக்கும் விளக்கமும் அதன் மீதுள்ள உங்கள் நம்பிக்கையும் தவறு; அதை செயல்படுத்த அல்லாஹ் நாடமாட்டான்; அல்லாஹ் நாடுவான் என்று நீங்கள் சொல்வது தவறு' என்று இஸ்லாமிய அடிப்படைகளின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதிபட சொல்கிறது.

Sunday 25 June 2017

பெருநாள் தொழுகைக்கு முன் பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிடுவது நபிவழியா?

கேள்வி: பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிட்டுவிட்டு செல்வது நபிவழி என்கிறார்களே, இது சரியா?

பதில்: பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிட்டுவிட்டு பெருநாள் தொழுகைக்கு செல்லவேண்டும் என்பது நபிவழியா என்ற உங்கள் கேள்வியில், இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

முதல் விஷயம், பெருநாள் தொழுகைக்கு முன் என்று பொதுவாக குறிப்பிட்டு கேட்டுள்ளீர்கள். நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் சாப்பிட்டுவிட்டு செல்வார்கள் என்பது நோன்புப் பெருநாளில்தான். இதை பல ஹதீஸ்களிலும் நாம் காண முடிகிறது. ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுதான் சாப்பிடுவார்கள். ஆனாலும், ஹஜ் பெருநாள் தொழுகை தொழ செல்லும் முன் சாப்பிடுவதை அங்கீகரித்தும் இருக்கிறார்கள். (அதை பின்னர் காண்போம்.)

நோன்புப் பெருநாள் தினத்தில் நபி(ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: இப்னு ஹுஸைமா (1426)

நோன்புப் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் காலை உணவாக பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிலிருந்து உண்பார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூல்: புஹாரி (953)




Monday 29 May 2017

ரமலானின் மூன்று 10 நாட்களுக்கும் மூன்று விதமான துஆக்களை ஓத வேண்டுமா?

ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட்கொடையை கேட்கும் நாட்கள் என்றும், நடுப்பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக்கு உரியவை என்றும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து மீட்சியளிக்கக் கூடிய நாட்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும்,

அந்த ஒவ்வொரு 10 நாட்களுக்கும் பிரத்யேகமான ஒவ்வொரு துஆ இருப்பதாகவும் மக்களிடத்திலே ஒரு செய்தி பரவலாக‌ வேரூன்றியுள்ள‌து. அதனால் மூன்று 10 நாட்களுக்கும் மூன்று விதமான துஆக்களை ஓதவேண்டும் என்று பலர் நம்பியும், நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். ரமலானின் பெயரால் நம்பப்படும் ஆதாரமற்ற செய்திகளில் இதுவும் ஒன்றாகும்.

Thursday 20 April 2017

"ஸலஃப் கொள்கை" என்னும் வார்த்தை விளையாட்டு!

'ஸலஃபு கொள்கையில் உள்ளவர்கள் நாங்கள்' என்று கூறிக் கொள்வோருடன் ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் கலந்துரையாடல் ஒன்று சமீபத்தில் நடந்தது. அதில் ஸலஃப் கொள்கை என்றால் என்ன என்று பேச ஆரம்பித்து, முடிவின்றி பாதியில் நின்று போனது. அதில் பேசப்பட்ட விடயங்களையும், சொல்லப்படாமல் விடுபட்ட விஷயங்களையும் இதில் தெளிவுபடுத்தலாம் என்ற நல்லெண்ணத்தில் முழுக்க முழுக்க அல்லாஹ்வை மட்டுமே அஞ்சி இந்த பதிவை எழுதுகிறோம். அவசியம் இதை முழுமையாக படியுங்கள்!

மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாக நபித்தோழர்களை பின்பற்றும் கொள்கையில் உள்ளவர்களான "ஸலஃபிகள்" என்று தங்களை சொல்லிக் கொள்வோரிடம், ஸலஃப் கொள்கை என்பது ஸஹாபாக்களை பின்பற்றுவதுதானே என்று நாம் கேட்டால், இல்லவே இல்லை என்றும் நாங்கள் அப்படி சொன்னோமா என்று தற்சமயம் ஸலஃப் கொள்கைப் பற்றி பேசுவோர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியா..?!! சரி, சலஃப் கொள்கை என்றால் என்ன என்று நீங்களே சொல்லிவிடுங்கள் என்று கேட்டால், சஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறே விளங்க வேண்டும்; அதுதான் சலஃப் கொள்கை என்கிறார்கள்.


இதுதானேப்பா ஸஹாபிய மத்ஹப்..?

இமாம் அபூஹனீஃபா எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறுதான் விளங்கவேண்டும் என்போர் ஹனஃபி மத்ஹப்.
இமாம் ஷாஃபி எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறுதான் விளங்கிக் கொள்ள வேண்டும் என்போர் ஷாஃபி மத்ஹப்.
இமாம் மாலிக் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்போர் மாலிக்கி மத்ஹப்.
இமாம் அஹ்மது பின் ஹம்பல் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்போர் ஹம்பலி மத்ஹப் என்று நீங்களும் சொல்வீர்கள்தானே? அதேபோலதான்..

ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறுதான் விளங்கவேண்டும் என்று சொல்பவர்களிடம் அதற்கு பெயர்தான் 'ஸஹாபிய மத்ஹப்' என்று நாம் புரிய வைக்கத் துவங்கினால், 'நாங்கள் அப்படி சொன்னோமோ..? சஹாபாக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்' என்கிறார்கள். அப்பாடா...! இப்பவாவது தங்களின் நிலைபாட்டை தெளிவாக சொல்லும் திசைக்கு திரும்பி வருகிறார்கள்போல் இருக்கிறதே என்று நினைத்து, "ஸஹாபாக்களுக்கு முன்னுரிமையா அல்லது ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறுதான் விளங்க வேண்டுமா?" என்று நாம் கேட்டால் மீண்டும் பல்ட்டி அடிக்கிறார்கள், சஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறுதான் விளங்கவேண்டும் என்று..!

Monday 30 January 2017

வரலாறுகள் மறைக்கப்படலாம், மறக்கடிக்கப்பட முடியாது..!

🔫 காந்திஜி இறந்த தினமல்ல இது, கொல்லப்பட்ட தினம் 🔫

ஆண்டு தோறும் துக்கம் அனுஷ்டிப்பது எங்கள் வழக்கத்தில் இல்லை. ஆனால் உலகறிந்த ஒரு படுகொலை, அந்த கொலைகார வழி நடக்கும் ஒரு கும்பலால் அப்பட்டமாக மறைக்க முயற்சிக்கப்படுவதை நினைவூட்ட இந்த நினைவு நாள் தேவைப்படுகிறது!

காவி தீவிரவாதி கோட்சேவால் தேசத் தந்தை என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் காந்திஜி கொல்லப்பட்ட தினம் இன்று! (1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30)

வரலாறுகள் மறைக்கப்படலாம்; மறக்கடிக்கப்பட முடியாது..!


பயணிக்கும் பாதை