அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday 23 October 2012

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்க‌ள் (2012)


ஏகனான இறையவனின் ஏவலினைச் செய்ய‌
        எங்கள் நபி இப்ராஹீம் எழுந்தனர் வாளேந்தி
செங்குருதி கண்ணெதிரே செம்மையுடன் பாய்ச்சும்
        சிந்தையுடன் தம் மகனைத் தியாகமிடச் சென்றார்!

    அந்த பெரும் நினைவாலே அல்லாஹ்வின் பேரில்
        அல்லலுறும் மாந்தருக்குத் தியாகமென்னச் செய்தோம்?
   அந்தமிகும் வாழ்விதனில் கொஞ்சமேனும் செய்ய‌
       இந்தப் பெருநாளிலே வாக்குறுதிக் கொள்வோம்!

"அல்லாஹு அக்பர்" என்ற தக்பீரை மொழிந்து
         அல்லாஹ்வின் நினைவோடு அணிவகுத்து நின்று
உள்ளோரும் இல்லாரும் உளங்கனிந்து வேண்டும்
         உயர்வான "அரஃபாத்"தைக் கொண்ட திருமாதம்!

    மாந்தரினில் "ஹஜ்"ஜுக்குச் சென்றுவரும் பேற்றை
        மறையவனே! பல்லோர்க்கும் மகிழ்வுடனே அளித்தாய்!
பாங்கு தரும் கடமைகளில் ஐந்தாவதனில் - யாம்
         பங்குபெற வாழ்வில் ஒருமுறையேனும் அருள்வாய்!

மங்கிவரும் ஒழுக்கங்களில் மறு மலர்ச்சியோடும்
     மங்காத நபி வழியில் மன எழுச்சி வேண்டும்!
  பொங்கும் மறைப் போதனையில் சிந்தையுடன் செயலும்
        பொருளினையும், நீண்டதொரு ஆயுளினையும் தருவாய்!

'குர்ஆனி'ன் கட்டளையைத் தம் மனதிற் கொண்டு
   'குர்பானி'யை மதிப்பறிந்து செய்யும் திருநாளில்
"உன்னத ஓர் இறையவனைச் சிரம் வணங்கிப் போற்றும்
  உலகமெலாம் வாழ்க!"வென வாழ்த்து நவில்கிறேன்!

கவிதை ஆக்கம்: 
(மறைந்த) எனத‌ன்புத் தந்தை, 
S. முஹம்மத் இஸ்ஹாக், B.A. 

Monday 15 October 2012

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 3)



முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதியைப் பார்க்கவும்.


பங்கிடும் முறை

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறுதான் கொடுக்கவேண்டும், இவ்வளவுதான் உண்ணவேண்டும் என்ற வரம்பு எதுவும் இல்லாததால், அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம். அதேசமயம், இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்கவேண்டும்.

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 2)



முதல் பகுதி மற்றும் மூன்றாம் பகுதியைப் பார்க்கவும்.

அடையாளமிடுதல்

அதிகமான ஆடுகளையும் மாடுகளையும் வைத்திருப்பவர்கள் குர்பானிக்கு பொருத்தமானதை அவற்றில் தேர்வுசெய்து அதற்கு அடையாளம் இட வேண்டும். அப்படியில்லாமல் பெருநாளன்று இருக்கும் கால்நடைகளில் கையில் கிடைக்கும் ஏதாவது ஒன்றைப் பிடித்து அறுத்துவிடக் கூடாது. அடையாளம் இடுவது கட்டாயம் இல்லையென்றாலும் முறையாக தேர்வு செய்யப்பட்ட‌ குர்பானிப் பிராணி மற்றப் பிராணிகளுடன் குழம்பிக் கொள்ளாமல் இருப்பதற்காகவும், குர்பானிக் கொடுப்பதை ஏழைகள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்)அவர்கள் காலத்தில் அடையாளமிடக்கூடிய‌ வழக்கம் இருந்தது. இன்று பெரும்பாலும் குர்பானிக்கென்று பிரத்யேகமாக பிராணிகள் வாங்கப்படுவதால் அடையாளமிட வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் அறுக்கும் அன்று வரை விற்பவர்களிடத்திலேயே விட்டு வைப்பவர்களும், அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பவர்களும் இம்முறையைக் கையாளுவதே சிறந்தது.

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 1)


இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான "ஹஜ்" கடமையை நிறைவேற்ற உலகின் அனைத்து திசைகளிலுமுள்ள இஸ்லாமியர்கள் கஃஅபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், நாம் துல்ஹஜ் மாதத்தை விரைவில் (இன்ஷா அல்லாஹ்) அடைய இருக்கிறோம்.

Sunday 14 October 2012

ஹஜ் - உம்ராவுக்கான சட்டங்கள் (பாகம் 1)


'ஹஜ் யாருக்கு கடமை?', 'ஹஜ்ஜின் சிறப்புகள், பலன்கள் எவை?' போன்ற இதர விஷயங்களைக் கூறமுன், இந்த வருட ஹாஜிகளுக்கு ஹஜ்ஜின் நேரம் நெருங்கிவிட்ட காரணத்தினாலும், ஆதாரங்களோடு கொடுக்காமல் அதன் சட்டங்களை மட்டும் கொடுத்தால் (உடனுக்குடன் எடுத்துப் பார்த்துக்கொள்ள) ஒரு குறிப்பேடாக பயன்படும் என்பதாலும், பிரிண்ட் பண்ணும் வசதிக்காகவும் இதில் 'உம்ரா' மற்றும் 'ஹஜ்'ஜுடைய சட்டங்கள் மட்டும் வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. (அதற்கான ஹதீஸ் ஆதாரங்கள் இன்ஷா அல்லாஹ் பிற்ச்சேர்க்கையாகவோ, வேறொரு பதிவாகவோ பின்னர் கொடுக்கப்படும்.) அத்துட‌ன், சுலபமாக புரிந்துக் கொள்வதற்காக தேவையான இடங்களில் அட்டவணைகளும், சில படங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ள‌ன. இதன் மூலம் தவறுகள் இல்லாத சரியான, நபிவழியில் அமைந்துள்ள 'ஹஜ் - உம்ரா'வின் அமல்களை அனைவரும் செய்வதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!

ஹஜ் - உம்ராவுக்கான சட்டங்கள் (பாகம் 2)



ஹஜ்ஜுக்காக 3 வகையாக இஹ்ராம் கட்டலாம். அவை,

ஹஜ் தமத்துஃ
 
முந்திய பதிவில் கண்டவாறு உம்ராவை முடித்துவிட்டு, ஹஜ்ஜுக்குரிய இஹ்ராம் கட்டுகின்றவரை இஹ்ரமிலிருந்து விடுபட்டு, மீண்டும் ஹஜ்ஜுக்காக துல்ஹஜ் பிறை 8 ல் இஹ்ராமில் நுழைந்து ஹஜ்ஜை நிறைவேற்றும் முறைக்கு "ஹஜ் தமத்துஃ" என சொல்லப்படும். இந்த முறையில் ஹஜ் செய்பவர்கள், இஹ்ராம் இல்லாத அந்த இடைப்பட்ட நாட்களில் மக்காவிலேயே தங்கியிருக்கவேண்டும். (இந்த முறையே சிறந்தது.)

Saturday 13 October 2012

ஹஜ்ஜும் உம்ராவும் பூரணமடைவது எப்போது?


இஸ்லாமிய மாதங்களில் உள்ள நான்கு புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இறுதிக் கடமையாம் ஹஜ் கடமையை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வாக்கு போன்ற அனைத்து வேறுபாடுகளையும் மறந்து நாமனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒருமித்த உணர்வுடன் ஒன்றுகூட இருக்கிறார்கள்! அப்படிப்ப‌ட்ட அற்புதமான ஒரு உலகமகா மாநாடாக திகழக்கூடிய 'ஹஜ்'ஜிலே இறைவன் வகுத்துள்ள சட்டங்களை, அவனுடைய தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியிலே மட்டுமே நிறைவேற்றும்போதுதான் அதன் முழுமையான பலன்களை நாம் அடைந்துக்கொள்ள முடியும், இன்ஷா அல்லாஹ்!

Friday 5 October 2012

"முஹம்மத்" - யார் இவர்?


முன்குறிப்பு: தமிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எப்படி தயாரிப்பது, எப்படி பிரிண்ட் செய்வது, தவறுகள் வந்தால் என்ன செய்வது போன்ற விஷயங்களால் அந்த ஆர்வம் பேச்சுடன் முடிந்து விடுகிறது. இஸ்லாம் பற்றி எப்பொழுதெல்லாம்...

"... மேலும் வாசிக்க" இங்கே க்ளிக் பண்ண‌வும்.

Monday 1 October 2012

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!


லகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!

பயணிக்கும் பாதை