அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday 21 August 2012

ரமலானுக்குப் பிறகு..

மாற்றம் வேண்டாமே!

சிறப்புமிகுந்த‌ ரமலான் மாதம் நம்மைவிட்டு சென்று, ஷவ்வால் மாதமும் ஆரம்பித்து விட்டது. ரமலான் மாதத்தில் பள்ளிகளெல்லாம் நிறைந்திருந்தும், பள்ளிக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்த மக்களும் கூட‌ நல் அமல்கள் செய்வதில் ஆர்வம் காட்டியும், சின்ன சின்ன தவறுகளிலிருந்தும் கூட தூரமாக இருக்கவேண்டும் என்று மக்கள் மிகுந்த கவனமுடன் இருந்தார்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இவ்வாறுதான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும்.

யார் மரணிக்கும் வரை அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, அந்த கட்டுப்பாட்டிலேயே உறுதியாக‌ வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி, மேலும் வாசிக்க...

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஷவ்வால் மாத (ஆறு) நோன்புகள்

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான‌ ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஆறு நோன்புகளையும் நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கும். மேலும் வாசிக்க...


Saturday 18 August 2012

மீண்டும் வந்துவிடு.. இனிய‌ ரமலானே!


போய் வா ரமலானே...! போய் வா!
மனமின்றி வழியின்றி விடை தருகிறோம்
மனமுருகி இறையோனை வேண்டுகிறோம்
மீண்டும் நீ எங்களிடத்தில் வந்திடவே....
மறு ஆண்டும் உனை நாங்கள் நோற்றிடவே!

Friday 17 August 2012

'ஃபெரீக்' ஷொர்பா (شربة فريك) - அல்ஜீரியன் கஞ்சி


ரமலானில் நோன்பு திறக்கும் (இஃப்தார்) நேரங்களில் சாப்பிடக்கூடிய உணவுகளில் முக்கியமான இடத்தில் உள்ளது "கஞ்சி"தான்! பெரும்பாலான நாடுகளில் அவரவர் உணவு வழக்கத்திற்கு ஏற்றார்போல் ஏதாவது ஒரு கஞ்சி வகையை இஃப்தாருக்கென தயார் செய்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அதிகாலைப் பொழுதிலிருந்து பகல் முழுவதும் ஒரு மிடரு தண்ணீர்கூட அருந்தாமல் சூரியன் மறையும்வரை இறைவனுக்காக உண்ணா நோன்பு இருந்துவிட்டு, இறைவன் அனுமதித்த நேரமான சூரியன் மறைந்தவுடனே நோன்பை முடித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறோம். அப்போது சுவையறியும் நாவில் ஆரம்பித்து, உணவுக் குழாய், வயிறு என அத்தனையும் நீண்ட நேர‌ ஓய்வில் இருப்பதால் எளிதாக செரிமானம் ஆகக்கூடியதும், சுலபமாக தயாரிக்கக்கூடியதும், முடிந்தவரை சத்துக்கள் அதிகம் நிறைந்ததும், கூடவே சுவையானதுமான‌ :) உணவை நாம் எடுத்துக் கொள்வது அன்றைய பொழுதின் முதல் வேலை உணவான இஃப்தாரில் இதமானதாக இருக்கும்; ஆரோக்கியத்திற்கும் நல்லது!

Thursday 16 August 2012

குர்ஆனைத் தொடமுடிந்த தூய்மையானவர்கள்!

முதல் பாகத்தைக் காண‌:-  திருக்குர்ஆனைத் தொடக் கூடாதாமே?!!

லுஹர் நேர தொழுகையை இருவரும் நிறைவேற்றிய பிறகு காமிலா தன் தாயாருக்கு விளக்க ஆரம்பிக்கிறாள்.

காமிலா: இப்போ சொல்லட்டா..ம்மா?

ரமீஸா: ம்... சொல்லு, சொல்லு..! இப்போ கொஞ்ச ஃப்ரீ டைம்தான நமக்கு.. அஸர் நேரம் வந்துட்டா தொழுதுட்டு இஃப்தார் வேலைகள ஆரம்பிக்கதான் சரியா இருக்கும்.


Thursday 9 August 2012

திருக்குர்ஆனைத் தொடக் கூடாதாமே?!!

ள்ளிக்குச் சென்று ரமலானின் இரவுத் தொழுகையை முடித்துவிட்டு வீட்டில் நுழைந்த‌ ரமீஸா, இளைய மகள் ஷாஹினா திருக்குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தவளாக அவளை நோக்கி வேகவேகமாக சென்றாள்.

ரமீஸா: என்னடி... ஷாஹின்..! இப்படி குர்ஆனை ஓதிட்டிருக்கே..? நோன்பு நேரத்தில் இப்படி ஹராமான காரியத்த செய்துட்டியேடி...! இங்கே கொடு அதை!

என குர்ஆனைப் பிடுங்கி ஷெல்ஃபில் வைக்க....

ஷாஹினா: என்னமா சொல்றீங்க...?! குர்ஆன்தானே ஓதினேன்..? இது ஹராமா.. ம்மா?
பயணிக்கும் பாதை