இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பான சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு, (சுமார் 80 வருஷங்களுக்குப் பிறகு) இப்போது இந்திய நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருவது நாமறிந்ததே! அதுபற்றி வெளியிடப்பட்ட ஒரு விழிப்புணர்வு கட்டுரையைப் படித்துச் சென்றவர்களில் ஒருவரான சகோதரர் கோவி. கண்ணன், அதன் உண்மை நிலைத் தெரிந்தும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யும் வண்ணமாக சமீபத்தில் எழுதிய தன்னுடைய பதிவொன்றில் தவறான ஒரு கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் இன்னொரு சகோதரரும் நம் பதிவின் பின்னூட்டத்தில் அறியாப் பிள்ளைபோல் கருத்து தெரிவித்திருந்தார். அவர்கள் இருவருக்கும், இன்னும் இதுபோன்று ஒன்றுமில்லாத வெறும் வாய்க்கு அவல் மெல்லுபவர்களுக்கும், அதற்கு 'ஆமா சாமி' போடுபவர்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்! (என்னுடைய பதிவுலக வாழ்க்கையில் இதுதான் முதல் 'எதிர்ப் பதிவு'/'மறுப்பு பதிவு' என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.)