அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 14 January 2012

'பொங்கல்' பொதுவான ஒரு திருநாளா?

முக்கிய குறிப்பு:

தமிழ் இஸ்லாமியர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை என்று கேட்கும் பல சகோதர சகோதரிகளுக்காக, இஸ்லாமியர்களின் சார்பில் விளக்கம் சொல்வதற்காகவே இந்த இடுகை! விளக்கத்தை புரிந்துக் கொண்ட பிறகு அழகிய முறையில் கருத்துக்களை பதியுங்கள். தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்! இதன் மூலம் 'பொங்கல்' சம்பந்தமாக இஸ்லாமியர்கள் மீதுள்ள‌ சிறு சிறு சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் களையப்பட்டு, நமக்கிடையே இருக்கும் சகோதரத்துவம் நீடிக்கவேண்டும் என்பதே நம் ஆவல்.


(குறிப்பு: சென்ற வருடம் 19/01/2011 அன்று வெளியிட்ட இந்தப் பதிவின்போது கேட்டுக் கொண்டது "தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்!" என்பது. நியாயமான சுய விளக்கங்களுக்குப் பிறகும் புரிந்துணர்வில்லாத சிலரும் இருக்கிறார்கள் என்பதால், தற்போது ஆரோக்கியமான விவாதத்தின் மூலமாவது புரியவைப்போம் என்ற நோக்கத்தில் "விவாதிக்கவேண்டாம்!" என்ற வேண்டுகோள் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. எனினும் எந்தக் கருத்துக்களாக இருந்தாலும் அழகிய முறையில் சொல்லுங்கள்.)



நன்றி கூகிள்

Friday 13 January 2012

ஒழியட்டும் 'ஒடுக்கத்து புதன்'!

ஸஃபர் மாதம் பிறந்து பாதி நாட்களுக்கும் மேல் ஓடிவிட்டன. இஸ்லாமிய வீடுகளில் ஒரே பரபரப்பு! அரிசியைக் கழுவி, காய வைத்து, இடித்து, சலித்து, பக்குவப்படுத்தி..... என்று ஏகப்பட்ட‌ முன்னேற்பாடுகள்! இருக்கும் உடுப்புகளில் பழைய துணிமணிகளைப் பொறுக்கி ஏழைகளுக்கு கொடுத்து கழித்துவிட வேண்டும் என்று ஓரம்கட்டி வைப்பார்கள். இதெல்லாம் எதற்காக..? ஸஃபர் மாதத்தின் கடைசி புதன் கிழமையான 'ஒடுக்கத்து புதன்' கிழமையைக் கொண்டாடவே! தயார்படுத்திய அரிசி மாவில் அன்றைய தினம் 'ஒரட்டி' என்று சொல்லப்படும் ஒரு வகை ரொட்டியைத் தயாரித்து, அதனுடன் சேவல் குழம்பு செய்வார்கள். அதற்காக கோழி வியாபாரிகளிடம் முன் கூட்டியே நாட்டுச் சேவல் ஆர்டர் பண்ணி வைக்கப்படும். முந்திய நாள் ஒட்டடை அடித்து, பழசு பட்டு நீக்கி, வீடு வாசல் கழுவி சுத்தம் செய்வார்கள்.


பயணிக்கும் பாதை