Monday 28 February 2011
கொழுப்பைக் கரைக்கும் பசலைக் கீரை!
Tuesday 22 February 2011
Sunday 20 February 2011
ஃபாஸ்ட் ஃபுட் உணவினால் குழந்தைகளை நோய் தாக்கும் அபாயம்!
அவரசகால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் அவசர பழக்க வழக்கங்களை பெரும்பாலும் பின்பற்றி வருகின்றனர். அவற்றில் ஒன்றான இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுமுறை குழந்தைகளையும் கூட ஆபத்தான நோய்களின் தாக்கத்திற்கு ஆளாக்குகிறது. இந்த உணவு வகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர். நவீன வரவான இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவு பழக்க வழக்கத்தால் உடல்நலன் மிக விரைவில் பாதிக்கப்பட்டுவிடுகிறது.
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால் சுமார் 50 வயது வரும்போது கேன்சர் உள்ளிட்ட ஆபத்தான நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கும் இரண்டாம்தர ரீதியிலான நீரிழிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எலும்புருக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தால் அங்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75% வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால் சுமார் 50 வயது வரும்போது கேன்சர் உள்ளிட்ட ஆபத்தான நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கும் இரண்டாம்தர ரீதியிலான நீரிழிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எலும்புருக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தால் அங்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75% வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Thursday 17 February 2011
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவசர கோரிக்கையும்!
அரசாங்கத்திற்கு அவசரத் தந்தியனுப்பி சமூக நலனுக்காக உதவுங்கள்!
இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சென்ற மாதம் முதல் தொடங்கப்பட்டது. 120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பதிவு செய்வதன் மூலம் இப்பணி தொடங்கப்பட்டது.
இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சென்ற மாதம் முதல் தொடங்கப்பட்டது. 120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பதிவு செய்வதன் மூலம் இப்பணி தொடங்கப்பட்டது.
Tuesday 8 February 2011
Monday 7 February 2011
மீனவர்களின் உயிர்காக்க இணைவோம் இணையத்தில்!
தமிழக மீனவர்களின் உயிர்காக்க இணையத்தில் நடக்கும் போராட்டத்தில் சிறு பங்களிக்கவே இந்த இடுகை! ஏற்கனவே நிறைய சகோதர சகோதரிகள் இதில் பங்கெடுத்துக் கொண்டாலும் இதுவரை வாய்ப்பில்லாத ஒவ்வொருவரும் இதில் கண்டிப்பாக கலந்துக் கொள்ளவேண்டும்.
நம் இந்திய திருநாட்டில் சில காலங்களாகவே திட்டமிட்டு செயல்படுத்தப்படும் இனக் கலவரங்கள், குண்டு வெடிப்புகள், வன்முறை வெறியாட்டங்கள் போன்றவற்றால் அப்பாவி பொது மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்கள் பறிக்கப்படுகின்றன. அந்த பட்டியலில் இப்போது ஒன்றுமறியா மீனவர்களின் உயிர்களும் துச்சமாக மதிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்படுகின்றன. இவற்றிற்கு பதில் சொல்லவேண்டிய முழு பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது.
நம் இந்திய திருநாட்டில் சில காலங்களாகவே திட்டமிட்டு செயல்படுத்தப்படும் இனக் கலவரங்கள், குண்டு வெடிப்புகள், வன்முறை வெறியாட்டங்கள் போன்றவற்றால் அப்பாவி பொது மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்கள் பறிக்கப்படுகின்றன. அந்த பட்டியலில் இப்போது ஒன்றுமறியா மீனவர்களின் உயிர்களும் துச்சமாக மதிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்படுகின்றன. இவற்றிற்கு பதில் சொல்லவேண்டிய முழு பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது.
Wednesday 2 February 2011
Subscribe to:
Posts (Atom)